×

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருநள்ளாறு பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை

காரைக்கால், மே 3: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற  தர்ப்பநேஷவரர் தேவஸ்தானம்  சனி பகவான் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக  பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமி பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ல கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பைரவரை தரிசனம் செய்தனர்.

The post தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருநள்ளாறு பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை appeared first on Dinakaran.

Tags : THIRUNALLAARU ,BYRAVAR ,THEIPIRAI ASHTAMI ,Karaikal ,Maha ,Theipirai ,Ashtami ,Darpaneshwarar Devasthanam Shani Bhagavan Shrine ,Tirunala ,Thirunalaluru ,
× RELATED வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை